கொரோனாவுடன் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த பெண்
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சுமார் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குறித்த கர்ப்பிணி பெண் கடந்த 6 வாரங்களுக்கு முன்னதாக கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில்,சுமார் 35 வாரங்களுக்கும் பின்னர் புத்தளம் ஆதார மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகளையும், ஓர் ஆண் குழந்தையையும் பிரசவித்துள்ளார்.
தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment