Header Ads



சிறுவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி


இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

இதனிடையே, 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 

ஒட்சிசன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 530 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்யத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 8,338 பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் 2,181 உடனடி என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.