Header Ads



1,800 மெட்ரிக் டன் சீனி பதுக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிப்பு - சதொசவுக்கு வழங்க நடவடிக்கை


ஒரு தொகை சீனி மூடைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்று இன்று -08-  நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சுற்றிவளைப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அரசின் கீழ் பதிவை பெற்றுள்ள போதிலும், சட்டவிரோதமாக சீனியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக குறித்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த களஞ்சியசாலையினுள் சட்டவிரோதமாக  சுமார் 1,800 மெட்ரிக் டன் சீனி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்போது, கைப்பற்றப்பட்ட சீனியை சதொசவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.