Header Ads



திடீர் உடல்நலக்குறைவினால் 15 வயது சிறுமி மரணம் - என்டிஜன் பரிசோதனையில் கொவிட் இருப்பது உறுதியானது


வீட்டில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக நேற்று (22) நண்பகல் 12 மணியளவில் சிறுமி பலபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணிநேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவரது இறுதி சடங்குகள் பரகஹதொட மயானத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.