Header Ads



இலங்கை குறித்து WHO பணிப்பாளர் மகிழ்ச்சி தெரிவிப்பு


இலங்கை, கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், அதன் இலக்கை அடைவதற்கான பாதையில் பயணிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கை தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், இதற்காக அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் டெல்டா திரிபின் விளைவாக கொவிட் பரவல் தீவிரமடைவதாகக் கடந்த தினம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.