Header Ads



We are Ready அமைப்பினர் கொரோனா நோயாளிகளின் பாவனைக்கான ஒருதொகை உபகரணங்களை கையளித்தனர்


(எம். இஸட்.ஷாஜஹான்)

Brandix கொவிட் 19 சிகிச்சை நிலைய நோயாளிகளின் பாவனைக்காக சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு.

சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள We are Ready அமைப்பினர் கொரோனா நோயாளிகளின் பாவனைக்கான  ஒரு தொகை உபகரணங்களை இன்று (31-8-2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் கையளித்தனர்.

சீதுவை பிரேன்டிக்ஸ் Brandix நிறுவனத்தில்  தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையம் விஜயகுமாரதுங்க வைத்தியசாலையின் பொறுப்பின் கீழ் இயங்கி வருகிறது.

 இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சக்கர நாற்காலிகள், பல்ஸ் ஒக்ஸிமீட்டர்கள் (Pulse Oximeter)  , நோயாளிகளின் பாவனைக்கான கழிவகற்றும்  நாற்காலிகள் தேவைப்படுகின்றன.  

இதுதொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியர்  அன்டன் ராஜநாயகத்தின் வேண்டுகோளின் பேரில்  We are Ready அமைப்பினர் இந்த உபகரணங்களை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையின் பிரதான வைத்தியு அதிகாரி கயான் ரணவீரவிடம் இன்று கையளித்தனர். அமைப்பன் தலைவர் சரூஜ் தலைமையிலான குழுவினர் இந்த உபகரணங்களை கையளித்தனர்

இந்த அமைப்பினர் சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொரோனா நோயாளிகளின்  சிகிச்சைக்காக ஒரு தொகை வைத்திய உபகரணங்களை கையளித்திருந்தனர். 

 வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் மற்றும் உள்நாட்டில் உள்ளவர்கள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு கொவிட் 19 ஜ கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சுகாதார ராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்னாந்துபுள்ளே அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.