Header Ads



நாட்டு மக்கள் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையே கடுமையான சூழ்நிலையில் இருக்கிறார்கள் - சஜித்


மருந்து தட்டுப்பாட்டுப் பிரச்சினை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சில மருந்துகளுக்கு துரித  ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றாலும், நண்பர்களுக்கு ஏற்படும் நன்மைகள் காரணமாக அவை தாமதப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே கடுமையான சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக உறுதியளிக்க வேண்டும் என்றும்  தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உலக நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் பணியாற்ற வேண்டும் என்றும் அதற்காக தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு'நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 23 ஆவது கட்டம் இன்று(31) இடம் பெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் பிரகாரம் நாற்பத்துஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா  (4,750,000/-) பெறுமதி வாய்ந்த (ICU Ventilator 01) அத்தியாவசிய மருத்துவமனை உபகரணம் ஒன்று மாத்தளை மாவட்ட பிரதான வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் அமல் ஹேமந்த ஜயதிலக்க அவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன,முன்னால் அமைச்சர் ரன்சித் அலுவிகார,முன்னால் அமைச்சர் அமைச்சர் வசந்த அலுவிகார,தம்புல்ல தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் தயா நன்தசிரி,துனை அமைப்பாளர் மங்கள பிரிநசாந்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 22 கட்டங்களில் 64 மில்லியன்(64,124,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்தது.

No comments

Powered by Blogger.