Header Ads



கொரோனோ நோயாளிகள் குறித்த, உண்மையான விபரங்கள் மறைக்கப்படுகின்றது - JVP


கொரோனோ வைரஸ் நோயாளிகள் குறித்த தரவுகள் விபரங்களை அரசாங்கம் மறைக்கின்றது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று குறித்த உண்மையை அறிவதற்கான மக்களின் உரிமைகளை அரசாங்கம் மறுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் செயலணி வெளியிடும் தரவுகளிற்கும் சுகாதார சேவைகள் மாகாணப்பணிப்பாளர்கள் வெளியிடும் புள்ளிவிபரங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் மூலமாக கொவிட் செயலணிக்கு தகவல்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ள அவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமோ அல்லது கொவிட் செயலணியின் தலைவரோ உண்மைக்கு மாறான புள்ளிவிபரங்களை வெளியிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.