பாகிஸ்தான் - இலங்கை இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் வலியுறுத்திய பிரதமர் மஹிந்த
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் அவர்கள் இன்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கினார்.
கொவிட்-19 சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட வைத்திய உபகரணத் தொகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators), 150 C-PAP செயற்கை சுவாசக் கருவிகள் என்பன உள்ளடங்கும்.
பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் (Pakistan’s SAARC COVID-19 emergency assistance ) கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
பிரதமர் ஊடக பிரிவு
இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. இலவசமாக மருந்து கிடைத்த மகிழ்ச்சியில் பறந்துபோய் கடன் கேட்டு பாகிஸ்தானை நெருக்கடியில் ஆக்காமல் இருந்தால் போதும்.
ReplyDeleteAnyway Muslims in SL discriminated
ReplyDeleteமுஸ்லிம் களை பலியாக்கி முஸ்லிம் நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகிறது கேவலம் கெட்ட கீழ் சாதி அரசியல்.
ReplyDelete