Header Ads



“அம்மா” நான் போய் வருகிறேன்..!

“அம்மா” நான் போய் வருகிறேன் எனவிடைபெற்று மருத்துவ ஊர்தியில் அவள்சென்றாள்.

அவள் வயிற்றில் இருந்த ஏழு மாதசிசுவும் அவள் கூடவே சென்றது.

பல நாட்களுக்கு போதுமான துணிகளை பையொன்றில் எடுத்துச்சென்றாள்.

மகள் வாட்டில் இருந்த பத்துநாளும் “அம்மா” தவறாமல் கோயிலுக்குப்போனாள்.

ஆனால்

பதினோராம் நாள் காலை வானம் இருண்டே விடிந்தது.

போதி முற்றத்தில் அம்மாவின் கால்கள் இரண்டு மூன்றுமுறை இடறியது.

போதிமரத்திற்கு தெளிக்க கொண்டுபோன நீர்க்குடம் தரையில் வீழ்ந்து உடைந்தது.

செத் கவியின் சிலவரிகளும் மறந்துபோய் பிழையாயிற்று.

வருவேன் எனச்சொன்ன எனது மகள் திரும்பவராத பயணம் சென்றாள்.

அவள் வயிற்றில் இருந்த சிசுவும் அவளின் தனிக்காக கூடவே சென்றது.

வனவிலங்காயினும் ஒருபோதும் இதுபோன்ற துயரம் வேண்டாம்

என வேண்டி மலர்கொண்டு விளக்கேற்ற இன்றும் நான் கோயிலுக்குப்போகின்றேன் என “அம்மா”  மகளிடம் சொல்கிறாள்.

சிங்களத்தில்: பசில் காரியவசம்

AKBAR RAFEEK

No comments

Powered by Blogger.