Header Ads



தூக்கப்பட்ட அஷ்ரப், மற்றுமோர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமனம்


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட    ஏ.பீ.எம்.அஷ்ரப் எம்பிலிப்பிட்டியில் அமைந்துள்ள தலைமைத்துவ அபிவிருத்திக்கான தேசிய மையத்தின் (National Centre for Leadership Development) பணிப்பாளராக நியமிக்கப்பட்டு நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்த இவர் இதற்கு முன்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இவரது காலப்பகுதியில் சமய விவகாரங்களுக்குள் சுருங்கிப் போயிருந்த திணைக்கள செயற்பாடுகளை தனது பதவிக் காலத்தில் கலை இலக்கியம், பண்பாடு நோக்கி விரிவாக நகர்த்தியதில் அவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

அரசியல் தலையீடுகளால் இவர் திடீரென இப்பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டார். நெருக்கடி மிக்க ஒரு காலத்தில் இவரது திடீர் இடமாற்றம் பெரும் இழப்பாகக்கருதப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் இவர்  நேற்று தனது புதிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


1 comment:

  1. இங்கேயாவது முந்திரிக் கொட்டை வேலை பார்காட்டி சரிதான்.......

    ReplyDelete

Powered by Blogger.