Header Ads



அதிகாரியை பழிவாங்க அவரது, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் வைப்பு


திருகோணமலையில் சிறை அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்படட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார்  மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை சிறைச்சாலையில் பணியாற்றி வந்த சிறை அதிகாரியொருவர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி கடமைக்காகச் சென்றபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சிறை அதிகாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளைக் கொண்டு சென்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்செயல் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்ததாக இளைஞரொருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

அவரது வாக்கு மூலத்தில்,மஹமாயபுரா பகுதியில் வசித்து வரும் இனோகா என்ற பெண்ணின் மகன் மலித் பின்சர ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதியாக உள்ளார்.

குறித்த நபர் விடயத்தில் சிறை அதிகாரி தமது கடமையைச் சரியாகச் செய்து வரும் வேளையில் அந்த இளைஞருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் தாயாரான இனோகா என்ற பெண் தம்மிடம் குறித்த சிறை அதிகாரியின்  மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை வைக்குமாறு கூறியதாகவும், இதனால் இந்த செயலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட  இளைஞர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை இன்றைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Tamil W

No comments

Powered by Blogger.