Header Ads



ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர் நிலை என்ன..? . ஐ.நா. பாதுகாப்புடன் வெளியேற்றப்படுவார்களா...??


ஆப்கானிஸ்தானில் தொழிலில் ஈடுபடும் சுமார் 50 இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவசியம் ஏற்படுமாயின், காபூலில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் உட்பட அனைத்து நாடுகளின் அதிகாரிகளும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன், அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.