ஆர்ப்பாட்டக்காரர்களினால்தான் கொரோனா பரவியது என்றால், அமைச்சர்களுக்கு எப்படி கொரோனா பரவியது..?
ஆர்ப்பாட்டக்காரர்களினால் தான் கொரோனா பரவினால், அமைச்சர்களுக்கு எப்படி கொரோனா பரவியது? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
திஸ்ஸமஹாராமவில் இன்று (07) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தின் ஒரு வருட இருப்புநிலையில் தோல்வி, திறமையின்மை மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைகளை மட்டுமே வெளிப்படுத்து நிற்கிறது என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டது அரசாங்கத்தில் சிலருக்கு பிரச்சிணையை ஏற்ப்படுத்தியுள்ளதோடு, தங்கள் தலைவர்கள் எந்த தடுப்பூசியை எப்போது எடுத்துக்கொண்டார்கள் என்று கேட்கும் வலிமை அவர்களில் எவருக்கும் இல்லை என்ற விடயத்தில் வருத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
Post a Comment