கொரோனா தொடர்பான முழுமையான தகவல்களை மனிதர்கள் அறியவில்லை - பேராசிரியர் இனோகா சீ.பெரேரா
கோவிட் வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்களை இன்னும் மனிதர்கள் அறியவில்லை என பேராசிரியர் இனோகா சீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவி வரும் கோவிட் தொற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் மனிதனுக்கு தொற்ற ஆரம்பித்ததன் பின்னர் அதன் பிறழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதுடன், அதன் ஆற்றல் அதிகரிக்கின்றது.
இந்த வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்களை இன்னும் மனிதர்கள் அறியவில்லை.
அதன்படி, இந்த வைரஸ் தொடர்பில் தரவுகளை பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
டெல்டா பிறழ்வு நாம் நினைப்பதற்கு மாறாக ஆற்றல் குறைந்ததாக இருக்கவும் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment