Header Ads



தாயுடன் கோயிலுக்குச் சென்ற சிறுமி துஷ்பிரயோகம் - ஆலய குருக்களை தேடி பொலிஸார் வலைவீச்சு


சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குளியாபிட்டி − போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காதல் தொடர்பை முறிப்பதற்காக, போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கடந்த சில தினங்களாக ஆலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.   

2 comments:

  1. This is simple matter. But ரிசாட்!?

    ReplyDelete
  2. ஹிசாலினி விடயத்தில் ஆவேசம் அடைந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம். இதய சுத்தம் இன்றி ஒரு கருமத்தில் ஈடுபட்டால் அது மீண்டும் எம்மைத்தாக்கும் என்பதனை இயற்கை சுடச் சுட காட்டியுள்ளமை ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.