Header Ads



நன்றியுள்ள அரசியல்வாதி மங்கள - ஜனாதிபதி இரங்கல்


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது மறைவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் மங்கள சமரவீரவின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும், திருப்புமுனையான நிகழ்வுகளையும் ஏற்படுத்தி,இலங்கை மக்களுக்குத் தீவிரமான பங்களிப்புகளை வழங்கி,தனது நாட்டிற்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்பைச் செய்த நன்றியுள்ள ஓர் அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர அவர்களின் திடீர் மறைவு என்னை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.அவருக்கு எனது உளமார்ந்த அஞ்சலிகள்! என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.