Header Ads



கொச்சிகடை, நீர்கொழும்பு வர்த்தக நிலையங்கள் நாளைமுதல் மூடப்படுகின்றன - அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவாம்...!


- நீர்கொழும்பு நிருபர் -

நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை 19ம் திகதி முதல் ஒரு கிழமைக்கு மூடப்படுகின்றன.

இப் பிரதேசங்களில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் நிழவுவதனால், அதிலிருந்து மக்களையும், தமது ஊழியர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கடைகளை மூடுவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மாணித்துள்ளன.

இது தொடர்பாக நீர்கொழும்பு முதல்வர் தயான் லான்ஸாவை தொடர்புகொண்டு கேட்டபோது,

வர்த்தக சங்கங்கள் கடைகளை மூடுவதற்கு தீர்மாணித்துவிட்டு என்னைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களுக்கு நீர்கொழும்பு,கொச்சிக்கடை பிரதேசங்களின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பாக எமது சுகாதார வைத்திய அதிகாரி மூலம் புள்ளிவிபரங்களுடன் விளக்கமளித்தோம். இதனை செவிமடுத்த அவர்கள் அரசுக்கு ஆதரவாக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் முகமாக தமது கடைகளை தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மாணித்துள்ளனர் எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.