Header Ads



அசாத் சாலியின் விளக்கமறியல் நீட்டிப்பு


மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட அசாத் சாலி  மீதான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று (31) விசாரணைக்கு வந்தது.

அதன்போது, அவரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி,  கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.