Header Ads



ஆப்கானிஸ்தான் இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்

உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் இராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானம் சர்க்சான்டார்யோ மாகாணத்தில் விழுந்து நொறுங்கியதாகவும், இதனை உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? எத்தனை பேர் உயிரிழந்தனர்? என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், இறுதியாக தலைநகரை நேற்று கைப்பற்றினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழையத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தான் படைகள் பின்வாங்கத் தொடங்கின. இராணுவ வீரர்கள் பலர் தலைமறைவாகினர்.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் இராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதேவேளை, எல்லை தாண்டி வந்து மருத்துவ உதவி கேட்ட ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் 84 பேர் சிறைபிடிக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. tw

No comments

Powered by Blogger.