Header Ads



மட்டக்களப்பு சுகாதார சட்டத்தை மீறி உற்சவம் - ஆலயத்துக்கு பூட்டு, நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார்  ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் . தனிமைப்படுத்துவதற்கும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுதனிமைப்படுத்துவதற்கு  தீர்மானிக்க ப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஜ்.வாசுதேவன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மண்முனை வடக்கிற்கான  கொரோனா செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சுகாதார சட்டத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 ஆலயஉற்சவம் தொடர்பாக கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சட்டத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இவ் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது

இதனனையடுத்து ஆலையத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும்.  உற்சவத்தில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்பத்துவதாகவும் தீர்மானிகக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. If this was from Muslims? Where are the racist sectarians? Where are the Jewish medias? where is kombunpola? where is weera wesn?

    ReplyDelete
  2. தன் இனத்தை அழித்துக் கொள்ள அந்த இனமே துணிந்துவிட்டால்,அதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.இந்தியாவில் இந்த நீராடல் காரணமாகத்தான் டில்லியில் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது செத்து மடிந்தார்கள் அந்த அகோரம் நடைபெற்று இன்னும் ஆறு மாதங்கள் கூடமுடியவில்லை. இப்படியான சமூகத்துக்கு என்ன செய்தாலும் பிரயோசனமில்லை.

    ReplyDelete
  3. அன்றே தந்தை செல்வா சொல்லிவிட்டால் தமிழ் மக்களை கடவுள் மான் பாதுகாக்க வேண்டுமென்று

    ReplyDelete

Powered by Blogger.