Header Ads



றிசாத்தின் மச்சான் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட பெண், கன்னித்தன்மையுடன் உள்ளார்: நீதிமன்றில் மருத்துவ அறிக்கை


முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி, கன்னித் தன்மையுடன் உள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவர், 2016ம் ஆண்டு மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், குறித்த யுவதி தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மருத்துவ அறிக்கையின் பிரகாரம், குறித்த யுவதிக்கு கன்னி கலைந்தமைக்கான அறிகுறிகள் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, சந்தேகநபரை 05 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதீமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம், சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்புக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தது.

நன்றி: ட்ரூ சிலோன்



3 comments:

  1. இப்படி பணத்திற்காக தனது கற்பையே சவாளுக்கு உட்படுத்திய இந்த கேவலம் கெட்ட தோட்டகாட்டு விபச்சாரிகளுக்கு என்ன தண்டனை?

    ReplyDelete
  2. Obviously, the Complaint against Badiuddin's Brother in Law is Baseless. Then, why release him on Bail? Shouldn't he be Discharged from the Charges made against him and the woman who made the complaint him be investigated to Punish her and any others behind the False Complaint?

    ReplyDelete
  3. கேஸ் இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை முழுமையாக விடுவிக்காமல் பிணையில்்விடுவிப்பது என்ன சட்டமோ?
    இப்படியான பொய்குற்றதிட்கு எதிராக கோடிக்கணக்கில் பொலிசாருக்கு எதிராக மான நஸ்ட வழக்கு தொடரலாம். முதுகெலும்பு இருந்தால் தொடருங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.