கொரோனாவால் மரணத்தவரின் உடலுக்கு பதிலாக, வேறொருவரின் உடல் தகனம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கொவிட்-19 காரணமாக மரணித்த ஒருவரின் சரீரத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் சரீரத்தை தகனம் செய்வதற்கு அனுப்பப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த 75 வயதான ஒருவர் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக அவரது சரீரம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
எனினும் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அவரது சரீரத்தை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைக்கு சென்றிருந்த உறவினர்களுக்கு சரீரம் வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக மரணித்த வேறு ஒருவரின் சரீரத்திற்கு பதிலாக திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த 75 வயதானவரின் சரீரம் தகனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த 75 வயதான நபரின் மனைவி வைத்தியசாலை காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment