Header Ads



முகக் கவசங்களைப் பயன்படுத்தியபின், குப்பைகளில் போட வேண்டாம் எரித்து விடுங்கள்


முகக் கவசங்களைப் பயன்படுத்தியதன் பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமென தெரிவிக்கும் பேராசிரியர் அஜந்தா பெரேரா, முகக் கவசங்களை எரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த பேராசிரியர் அஜந்தா பெரேரா, நாட்டிலுள்ள அனைத்து மக்களும் முகக் கவசங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பலர் ஒன்றல்லது, இரண்டு தடவைகள் மாத்திரமே முகக் கவசத்தைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது, முகக் கவசங்களை வீசி எறிகின்றனர். முகக் கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினிக் கொண்டு அவற்றைக் கழுவி விட்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்தா பெரேரா தெரிவித்தார்.

கண்ட இடங்களில் முகக் கவசங்களை பொதுமக்கள் வீசக்கூடாது. தங்களை மாத்திரம் முகக் கவசம் பாதுகாத்தால் போதுமென்ற மனநிலையில் இருக்கும் இலங்கையர்கள் பலர் முகக் கவசங்களை பயன்படுத்தியதன் பின்னர் கண்ட இடங்களில் வீசுவதாகவும் தெரிவித்தார்.

முகக் கவசங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமென்பதால், சுகாதாரப் பாதுகாப்பு அறிவுத்தல்களுக்கு அமைய முகக் கவசங்களைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் எனவும், தொற்றாளர்கள் பயன்படுத்தும் முகக் கவசங்கள் எரிக்கப்பட வேண்டும்  என்றார்.

முகக் கவசங்களை குப்பைகளில் போட வேண்டாமெனவும், அவற்றை வீடுகளிலேயே எரிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர்,  இவ்வாறு செய்தால் பாரியளவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.