Header Ads



மக்களைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லை - ரணில்


மக்களைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த தருணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு நிபுணர் குழுவை நியமிக்க அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களை தியாகம் செய்ய அரசுக்கு நியாயமான உரிமை இருக்கிறதா என்று சூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்ட பதிலை வழங்கினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனாவைக் கட்டுப்படுத்த நிபுணர் குழுவை நியமிக்க அழைப்பு விடுத்தது என்றும் இலங்கையைத் தவிர அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை நிறைவேற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.