தங்கச் சங்கிலியை கொடுக்க மறுத்த தாய், கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்
இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயார் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், சம்பவதினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன், தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார்.
தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார், மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மகனைக் கைது செய்ததுடன், சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கனகராசா சரவணன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
இந்த மக்கள் ஏன் இந்த அளவு மிருகங்களை விட மோசமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அல்லது அரசாங்கம் ஆய்வு செய்து அதன் விபரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ReplyDeleteNew fashion
ReplyDelete