பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் றிசாத் பங்கேற்பு - மஹிந்த, சஜித் கலந்து கொள்ளவில்லை
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடியது.
இதன்போது, கொரோனா அபாயம் காரணமாக நாளையதினம் (17) மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment