தலிபான் ஆட்சியை ஏற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, வெளிவிவகார அமைச்சு முடிவுசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சகத்தை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார். SARRC பிராந்தியத்தில் உள்ள நாடு என்பதால் ஆப்கானிஸ்தானின் நிலைமையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும கூறினார். IBC
இவர் தாலிபான்களை அங்கீகரிக்காவிட்டால் தாலிபான்கள் ஆட்சியிலிருந்து வாபஸ் பெறுவார்கள்.
ReplyDeleteநீங்கள் ஏறுக்கொள்ளனும் எனும் சட்டமுள்ளதா என்ன, உங்கள் SAARC அமைப்பால் அங்கத்துவ நாடுகள், இலங்கை அடைந்த நன்மைதான் என்ன?
ReplyDelete