Header Ads



நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழந்தார் - BBC


நியூசிலாந்தில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழந்தார். இது தடுப்பூசியின் தொடர்புடைய மரணம் எனக் கருதப்படுகிறது.

தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இருந்த உடல் பிரச்னைகளும் தடுப்பூசி போடப்பட்டதால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்படுவது மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய தடுப்பூசி ஒழுங்கமைப்புகள் கூறுகின்றன.

தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைப் பார்க்கும்போது அதனால் ஏற்படும் அபாயம் ஒன்றுமில்லை என்றும் அவை கூறுகின்றன.

நியூசிலாந்தில் தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

No comments

Powered by Blogger.