Header Ads



நாட்டின் முழு சந்தையும் 5 திருடர்களின் ஏகபோகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது - சுனில் ஹந்துன்னெத்தி


நாட்டின் முழு சந்தையும் இன்று நான்கு அல்லது ஐந்து திருடர்களின் ஏகபோகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நா.உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி வெளிப்படுத்துகிறார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதன் மூலமும், இவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உதவிய மோசடி செய்பவர்களுக்கு அசாங்கம் நன்மைகளை வழங்கி வருகின்றது.

அதேநேரம் மக்களை அரசாங்கம் பழிவாங்குகிறது.

மனித உயிர்களை தியாகம் செய்வதன் மூலம் மக்களை காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் ஹந்துன்னெத்தி குற்றம் சாட்டினார்.

மோசடி மாஃபியாவை திருப்திப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

பொருட்களின் விலையை அதிகரிக்கும் போது அரசாங்கம் இந்த வறிய மனிதர்களை நினைவில் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் விவசாயியைப் பற்றி பேசும் போது, உரப் பிரச்சினை எழுந்தபோது விவசாய அமைச்சருக்கு கொரோனா தொற்றியது.

எண்ணெய் விலை உயரும் போது பெற்றோலிய அமைச்சர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார் என்றும், பின்னர் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, வர்த்தக அமைச்சர் பொருட்களின் விலை தொடர்பான பல்வேறு வாதங்களை தள்ளி வைத்துவிட்டு, யார் வேண்டுமானாலும் சதொசவில் இருந்து பொருட்களை வாங்க முடியும் என்று வாதிட்டார், இறுதியாக அவருக்கும் கொரோனா தொற்றியது என்று கூறினார், IBC

2 comments:

  1. நாட்டைச்சூறையாடத் தூண்டும் கள்வர்கள் அனைவருக்கும் கொரோனா வந்து மடிய வேண்டும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.