கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 5,000 டொன் சீனி
சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 5,000 டொன் சீனி, கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருப்பதே, நாட்டில் சீனியின் விலை அதிகரிப்புக்கு காரணமென, சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சதொச தலையிட்டு குறித்த சீனித் தொகையை துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம் செலுத்திய ஏற்பட்ட தாமதமே, தற்போது பிரச்சினையாய் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சினி தொகையை நாளை அல்லது நாளை மறுதினம் விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனியின் விலையை பல மடங்காக அதிகரித்துவிட்டு பொது மக்களுக்குக் காட்டும் பூச்சாண்டிக் காரணம் தான் இவை. இந்த நாட்டு மக்கள் மடையன்களாக இருக்கும் வரை எந்த அரசாங்கத்துக்கும் பொதுமக்களை இலகுவாக மாடாக்கலாம்.
ReplyDelete