மில்லியன் ரூபாய்களுடன் சந்திரிக்கா கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான சந்திரிகா என்பவர், 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கிரிபத்கொடையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
52 வயதான இந்தப் பெண், களனி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கிரிபத்கொட, ராகம மற்றும் களனி பகுதிகளில் இவர் நீண்ட காலமாக ஹெரோய்ன் விநியோகித்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான சந்திரிகாவிடமிருந்து 11 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் 26,65,100 ரூபாய் பணம் ஆகியன பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர், கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment