2150 முஸ்லிம்களின் கொரோனா ஜனாஸாக்கள், இன்று திங்கட்கிழமை வரை மஜ்மா நகரில் நல்லடக்கம்
- நஜிமிலாஹி -
மொத்தமாக 2372 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" இன்று திங்கற்கிழமை (29.08.2021) அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 26 முஸ்லிம் ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் தெரிவித்தார்.
இதன்படி 2150 ஆக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 41 கிறிஸ்தவ மரணங்களும் 109 இந்து மரணங்களும் 62 பௌத்த மரணங்களும் இன்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு இந்திய பிரஜையின் இந்து மரணம், சூடான் நாட்டைச்சேர்ந்த ஒரு முஸ்லிம், மாலைதீவு நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அடங்களாக 03 வெளிநாட்டு மரணங்களும் இதுவரையும் வெளிநாட்டு பிரஜைகளின் மரணங்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment