Header Ads



ஒரேநாளில் மேலும் 124 பேரை பலி கொண்டது கொரோனா


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

75 ஆண்களும் 49 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 28 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் ஒருவர் மரணித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,464 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,246 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,244 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  300,406 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 35,500 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

1 comment:

  1. இலங்கை மக்கள் மட்டும் என்ன உத்தமர்களா? அப்பட்டமான அநியாயக்கார ஆட்சியாளர்களை உருவாக்கி இஸ்லாத்தை அழிக்க இஷ்ரேல், இந்திய கூட்டணி களுக்கு உதவி இனவெறி யாலே முஸ்லிம்களை ஓரங்கட்டி விட்டு பயங்கரவாதிகளுக்கு பாரளுமன்றத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். இதை இறைவன் பார்த்து கொண்டு சும்மா இருப்பானா?

    ReplyDelete

Powered by Blogger.