Header Ads



இரவு 11 மணிவரை கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம் - இன்று 30 மையத்துக்கள் நல்லடக்கம், நேற்றுவரை 1793 உடல்கள் புதைப்பு


இன்று (18) இரவு 9.30 மணிவரையும் 30 கொரோனா மரணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஜனாஸாக்கள் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது .

இன்று இரவு 11 மணிவரையும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்ப்படும் என்று ஜப்னா முஸ்லிமுக்கு தெரிவித்தார் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர்.

நேற்று (17.08.2021) வரை 1793 மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.