Header Ads



ரிஷாத்திற்கு எதிராக ஒழுக்காற்று SJB நடவடிக்கை எடுக்கவில்லை - மலையக சிறுவர்கள் கொழும்பில் தனவந்த வீடுகளில் வேலை


ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை

மலையத்தைச்சேர்ந்த அதிகமான சிறுவர்கள் கொழும்பில் தனவந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். 

இதுதொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் சிறுவயதுடைய பிள்ளையை வீட்டு வேலைக்கு அமர்த்திய ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எம். முஸம்மில் கேள்வி எழுப்பினார்.

தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வீரகேசரி

1 comment:

  1. நீ முதலில் உன் பெயரை மாற்றிக் கொள்

    ReplyDelete

Powered by Blogger.