Header Ads



எடுபிடி வேலை செய்து, காலில் விழும் குழு இருக்கும் வரை நாடு முன்னேறாது - அப்புஹாமி Mp


நாடாளுமன்ற உறுப்பினர் இன்று(02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்த கருத்துக்கள்.

இன்று நாடு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது, எந்த நேரத்திலும் ஒரு அப்பாவி நபரைக் கொல்ல அரசாங்கம் தயாராகி வருகிறது. அரசாங்கம் நான்கு பவுண்டரிகளிலும் உள்ளது. இதுபோன்ற நேரத்தில் ராஜபக்சர்களின்  முழங்காலில் விழும் முதுகொலும்பில்லாத ஒரு குழுவினர் உள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு எடுபிடி வழங்கும் கோழைகள் இருக்கும் வரை மக்கள் பிரச்சிணைகள் முன்வராது.  இந்த மக்கள் கோதபய ராஜபக்ஷ வரும்போது காலில் விழுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ, நமல் ராஜபக்ஷ மற்றும் சாமல் ராஜபக்ஷ ராஜபக்ஷ ஆகியோரைப் பார்க்கும்போதே காலில் விழுகின்றனர். இப்போது அவர்கள் பசில் ராஜபக்ஷவின் காலில் விழுந்து எடுபிடி வேலைளை செய்ய தயாராகி வருகிறார்கள். தயாசிரி ஜயசேகர போன்ற முதுகொலும்புள்ளவர்கள் அரசாங்க அமைச்சர்கள் வேறும் ரப்பர் முத்திரைக்கு சமனானவர்கள் என்று உன்மைகளை தைரியமாக கூறினார்.எடுபிடி வேலை செய்து காலில் விழும் குழு இருக்கும் வரை நாடு முன்னேறாது.இவர்களுக்கு துணை போன மதகுருக்களும் சேர்ந்து இந்தக் குழு தான் நாட்டை அழித்த குழ.

இன்று தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.சர்வதேச தரப்படுத்தல்களில் கீழ் மட்டத்தில் உள்ளோம். பொருளாதாரம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் சர்வதேச அளவில் ஓரங்கட்டப்பட்டுள்ளோம்.சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களிலிருந்து இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.தேசியப் பொருளாதாரமும் கிராமியப் பொருளாதாரமும்  வீழ்ச்சியடைந்து மிகவும் உதவியற்றவையாகிவிட்டன. கிராமிய வடைக் கடை,தேனீர் கடை,பாக்குக் கடை,இடியப்பக் கடை என்று அத்தகைய சகோதர தொழிலாளர்களும் சாப்பிட வழி இல்லாமல் தடமாறுகுனரறனர். நாட்டின் மீது முழு நம்பிக்கையையும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்தது விட்டனர், அரசியல்வாதிகள் குறித்தும் மற்றும் தங்கள் சொந்த வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

நாட்டின் ஒவ்வொரு துறையும் சரிந்துவிட்டன, சிறிய மனிதனிடமிருந்து பெரிய வர்க்கம் வரை ஒரு திட்டம் வரையப்படும் வரை சாத்தியமான அடைவுகளை எதிர் பார்க்க முடியாது. நாட்டின் சிறிய மனிதனுக்காக ஒரு திட்டத்தை உருவாக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கட்டாயப்படுத்துகிறோம்.இந்த நாட்டை அழித்த குடும்பமாக ராஜபக்ஷ குடும்பம் வரலாற்றில் இடம் பெறுகிறது. மக்களை  வாழ வைக்கும் திட்டத்தையும் அத்தியாவசிய சேவை திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்க்கட்சியாக நாங்கள் ஆதரிக்கிறோம். மக்களை வாழவும் சாப்பிட வைக்குமாறும் எப்போதும் அறிவுறுத்தும் சஜித் பிரேமதாச, நமக்குத் தேவையானவர்களை மட்டுமல்ல,சகல மக்களுக்கும் உதவி செய்யுமாறு எங்களை தொடர்ந்தும் வலியுறுத்துகிறார். மக்களைப் பாதுகாப்பது நமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

நாட்டில் கல்வி இன்று முழுமையாக வீச்சில் உள்ளது, தேசிய மாணவர் படையணியினர் கற்பித்தல் தொழிலை அறிந்தவர்கள் இருக்கிறார்கள், இன்று கல்வி இரு பிரிவுகளாக மாறியுள்ளது.ஒன்று வசதி உள்ளவர்கள்,மற்றயது வசதியற்றவர்கள்.ஸ்மார்ட் போன்,டோடா, இணைய வசதிகள் இல்லாதவர்களுக்கு கற்பிக்க அவற்றைப் வழங்கும் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு  முன்மொழிகிறோம்.எங்கள் பூரண ஒத்துழைப்பை இதற்காக வழங்குவோம்.

இன்று நாம் சுற்றுச்சூழலை அழிப்பதைப் பற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அதைவிடவும் அதிகமான விடயங்கள் நடக்கின்றன. கப்பல்கள் கொண்டு வரப்பட்டு தீ வைக்கப்பட்டன மற்றும் கடல் சூழல் அழிக்கப்பட்டது.இப்போது கல்பிட்டியில் ஒரு புதிய அழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தொல்பொருள் இடம் சார்ந்த பகுதி அழிக்கப்படுகிறது.குவேனியின் மைத்துனி அல்லிராணியின் பங்களாவும் நீர் தோக்கமும் உள்ள இடங்களில் தென்னை மரங்கள் வெட்டப்படுகின்றன.ஒருபுறம், சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது , மறுபுறம், தேங்காய் மரங்கள் அழிக்கப்பட்டு, தொல்பொருள் தளமும் அழிக்கப்படுகிறது. இந்த நாடு ஒரு ராஜபக்ஷ குடும்பத்திற்குரிய நாடல்ல, இலங்கையர்கள் ஒன்றாக வாழ்ந்த நாடு, இந்து சமுத்திரத்தின் முத்து என்ற சர்வதேச அபிபானம் கொண்ட நாட்டை அபாக்கியம் நிறைந்த நாடான பின்பத்தை இன்று ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் சேருவார்கள் என்று சமூகத்தில் பேச்சு இருப்பதாக ஒரு  ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்;

அரசாங்கத்தில் மொங்கல்  அமைச்சர்கள் இருந்தபோதிலும், ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறான மொங்கல்கள் இல்லை. நாட்டை நேசிக்கும் ஒரு திறமையான குழு ஐக்கிய மக்கள் சக்தியுள்ளது.எவரும் எங்களுடன் சேரலாம்.

52 நாள் ஆட்சியின் போது கோடிகள் வெளியான நிலையில்,அதன் பக்கம் செல்லாத முதுகெலும்புள்ள ஒரு குழு எங்களிடம் இருந்தது.அத்தகையவர்களே இன்றும் உள்ளனர்.முற்போக்கு சிந்தனையுள்ள நல்ல எண்ணம் கொண்ட சிறந்த குழு எங்களிடம் உண்டு இவர்களைக் கொண்டு நாட்டைக் கட்டியொழுப்புவோம் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.