Header Ads



கிறிஸ்த்தவர்களிடம் இருந்து தப்பிக்கவே ரிஷாட்டை பலிக்காடாக்கியுள்ளனர், அவர் குற்றம் செய்யாமலே கைது செய்யப்பட்டும் உள்ளார் - நளின் Mp


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

உர நெருக்கடியை உருவாக்கி உரங்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அரசாங்கம் முடிவு செய்தனர்.இதனால் விவசாய நிலங்களில் ஒரு நெருக்கடி எழுந்துள்ளது. இதுபோன்ற ஓர் சூழ்நிலையில் 10,000 மெட்ரிக் டொன் உரங்களை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அது எப்படி நடக்கும்? இரட்டை முகங்களை அரசாங்கம் வெளிப்படுத்துகிறது.யாருடய தோவைக்காக இது இறக்குமதி செய்யப்பட்டள்ளது என மஹிந்தானந்த அமைச்சரிடம் வினவுகிறோம்.வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரகசியமாக இறக்குமதி செய்யப்படுகிறது.உரங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறி இன்று உரங்களை இறக்குமதி செய்துள்ளனர்.கஜமித்துரு நண்பர்களை போஷிப்பதற்கே இதை மேற்கொள்கின்றனர்.உரம் இன்மையால் 

தெற்கில் உள்ள விவசாயிகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்படுகின்றன. தேங்காய் பயிருக்குப் உரங்கள் கிடைக்கவில்லை. அப்படியானால், இந்த உரங்களை விவசாய  அமைச்சர் யாருடை தேவைக்கு  கொண்டு வந்தார்? பருவ போகத்திற்கே வழங்காதவர்கள் இன்று சில நபர்களின் தோவைக்காக இறக்குமதி செய்துள்ளனர்.இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க விவசாய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சர் மஹிந்தானந்த அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திடும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உண்டு. திரு. சஷிந்திர ராஜபக்‌ஷ விவசாய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்‌ஷ குடும்பத்தில் ஒருவர் இராஜாங்க அமைசரசர் என்றால் அவர் ஓரு அமைச்சரவை அமைச்சர் போன்றவர்.

இன்று விவசாயியும் நுகர்வோர்களும் உதவியற்றவர்களாக உள்ளனர். இன்று உர கேள்விக்கு யார் பதிலளிப்பது? திரு.பந்துல குணவர்தன நாட்டில் இருக்கிறாரா என்று கேட்கிறோம். இன்று சம்பாவுக்கு எண் விலை கொடுக்கப்பட்டுள்ளது, அரிசி உற்பத்தி முதலாளிகள் விற்பனை பேட்ஜை அகற்றி, அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக முடியாத அரசாங்கத்திற்கு மற்ற பிரச்சினைகளுக்கு பதில்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.இன்று டட்லி சிரிசேனவுக்கும் பயந்துள்ளது இந்த அரசாங்கம்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சம்பவத்தை மறைக்க அரசாங்கம் படிப்படியாக முயற்சிக்கிறது. கப்பலின் பணியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கப்பட்டது. இழப்பீடு பெற முடியும் ஆனால் அந்த இழப்பீட்டை மோசடி செய்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தும். ஒரு சிறிய இழப்பீடுத்தொகை மட்டுமே நாட்டிற்கு கிடைக்கும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காதினல் நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார், இது குறித்து நாங்கள் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் கூறி வருகிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. உன்மையான சூத்திரதாரிகளை கண்டு பிடிக்கும் நோக்கம் இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை.அவ்வாறு உன்மைகளைத் தேடினால் இந்த ஆட்சியாளர்களே மாட்டிக் கொள்வர்.காதினல் மற்றும் கிறுஸ்தவ சமூகத்திலிருந்து தப்பிக்கவே ரிஷாட்டை பலிக்காடாக்கியுள்ளனர்.

அவரின் விசாரணைகளுக்காக, இந்த வழக்கில் பல நீதிபதிகள் சமீபத்தில் இராஜினமா செய்தனர்.குற்றமில்லாமல் கைது செய்துள்ளனர்.இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தனர்,ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சிக்கு வந்த பின்னர் நீதி நிலை நாட்டப்படவில்லை.

இன்று அனைத்து தொழிற்சங்க போராட்டங்களையும் அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கல்விக்காக போராடும் துறவிகள் ஹேக் செய்யப்படுகிறார்கள்.துறவிகளால் நியமிக்கப்பட்ட இந்த அரசாங்கம் இன்று துறவிகளை கிடப்பில் போட்டுள்ளது.  தற்போதைய ஜனாதிபதிக்கு  ஆட்சிக்கு வந்து இன்னும் ஒன்றரை வயதாகவில்லை, இப்போது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தேடுகிறார். சேர் தோல்வி என்பது முழு நாட்டிற்கும் தெரியும், எனவே இப்போது மற்றுமொரு ராஜபக்‌ஷ சகோதரரை கொண்டு வந்துள்ளனர்.அனைத்து ராஜபக்ஷ ஐயாக்களும் ஒன்றுதான்.பல எதிர் பார்குகளுக்கு மத்தியில் 69 இலட்சம் வாக்குகளை வழங்கிய மக்கள் விரக்தியில் உள்ளனர்.

எங்கள் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியாக வேறு பாதையில் செல்கிறார். திறமையானவர்களுக்கு கட்சி இடம் அளித்துள்ளது.நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுவோம்.சஜித் பிரேமதாச மீது கட்டுக் கதைகளைக் கூறுகின்றனர். குல வேறுபாட்டை முன்னிலைப்படுத்தகின்றனர். ஆனால் அவர் திறமையனவர்களுக்கு உரிய இடம் வழங்கி சகலரையும் அனைத்துச் செல்கிறார் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.