Header Ads



அநுரகுமாரவுக்கு கொரோனா தடுப்பூசி இன்று குத்தப்பட்டது


ஜே.வி.பியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, கொவிட்-19 தடுப்பூசியை, இன்று (14) ஏற்றிக்கொண்டார்.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாந்தி மன்ற விஹாரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திலேயே அவர், தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாட்தொகுதியினருக்கும், பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்தும் இராணுவ வைத்தியசாலையில் வைத்தும் கொரோனா தடுப்பூசிகள் கடந்தகாலங்களில் ஏற்றப்பட்டன. எனினும் அவ்விரு இடங்களிலும், அனுரகுமார திஸாநாயக்க, தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.