Header Ads



வயது குறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி, வேலைவாங்கும் வீடுகளைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கை


வயது குறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி வேலைவாங்கும் வீடுகளைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கையொன்றைத் தொடங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறைந்த வயதுடைய சிறுவர்கள் பணிபுரியும் வீடுகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.

மசாஜ் நிலையங்களில் வயது குறைந்த சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.