Header Ads



அமைச்­சர்­களின் தொகு­தி­களில் மாத்­திரம் தடுப்­பூசி வழங்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது - ஹலீம்


அர­சியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டை­யில்தான் கொவிட் 19 தடுப்­பூ­சிகள் ஏற்­றப்­ப­டு­வ­தாக கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீம் குற்றம் சுமத்­தியுள்ளார்.

அக்­கு­றணை பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டத்தில் கலந்­து­கொண்டு கருத்­து­வெ­ளி­யி­டும்­போதே அவர் இந்த குற்­றச்­சாட்டை முன்­வைத்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலக் ராஜ­பக்ஷ தலை­மையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற இக்­குழுக் கூட்­டத்தில் அக்­கு­றணை பிர­தேச சபை தவி­சாளர் இஸ்­திஹார் இமா­முதீன், அக்­கு­றணை பிர­தேச செய­லாளர் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது ஹலீம் எம்.பி. மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், கொரோனா இலங்கை நாட்டை பல்­வேறு வகை­யிலும் வெகு­வாக பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. மக்கள் பெரும் சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கையில் இந்த அர­சாங்கம் அர­சியல் நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

கொவிட் 19 தடுப்­பூ­சிகள் வழங்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில், கண்டி மாவட்­டத்தில் அர­சியல் ரீதி­யி­லேயே இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இம்­மா­வட்­டத்தில் அமைச்­சர்­களின் தொகு­தி­களில் மாத்­திரம் தடுப்­பூசி வழங்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான மஹிந்­தா­னந்த, கெஹ­லிய, திலும், லொஹான் போன்­றோரின் தொகு­தி­களில் தடுப்­பூ­சிகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­கிறேன். ஆனால், ஹாரிஸ்­பத்­துவ, யடி­நு­வர, உடு­நு­வர, ஹேவா­ஹெட்ட போன்ற தொகு­தி­களில் இது­வ­ரையில் தடுப்­பூ­சிகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு அர­சியல் ரீதியில் செயற்­ப­டாது இந்த அர­சாங்கம் மக்­க­ளுக்கு நீதியை வழங்க வேண்டும்.

அத்­தோடு, பயணக் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருந்த சூழலில் 5000 ரூபா நிவா­ரணம் வழங்­கு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்த போதிலும் அவை முறை­யாக பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வில்லை. மக்­களின் தேவையை அர­சாங்கம் உணர்ந்­து­கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. நாளுக்கு நாள் விலை­வா­சிகள் உயர்­வ­டை­வ­தால் மக்கள் பட்­டி­னியில் வாடும் நிலையே இன்று உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. கொரோ­னாவால் வாழ்­வா­தா­ரத்தை இழந்­தி­ருக்கும் இந்த மக்­க­ளுக்கு அர­சாங்கம் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு பதி­லாக விலை­வா­சி­களை உயர்த்தி மேலும் சுமை­யையே கொடுக்­கின்­றது. இது மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடு முட்­டிய கதைக்கு ஒப்பானதாகும்.

மேலும், சமுர்த்தி பய­னா­ளிகள் பல­ருக்கு கொடுக்­கப்­படும் தொகை குறைக்கப்­பட்­டுள்­ளது. ஒழுங்­கான முறையில் அவர்­களுக்கான சமுர்த்தி தொகையும் பகிர்ந்­த­ளிக்கப்படு­வ­தில்லை என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீம் இங்கு சுட்­டிக்­காட்­டினார்.

No comments

Powered by Blogger.