Header Ads



சினோபார்ம் தடுப்பூசியை பெறுவதை தவிர இலங்கைக்கு வேறு வழியிருக்கவில்லை - ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்


சினோபார்ம் தடுப்பூசியை பெறுவதை தவிர இலங்கைக்கு வேறு வழியிருக்கவில்லை என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்குநாடுகளிலும் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதில் நீண்ட தாமதம் காணப்பட்டமையினாலேயே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை நம்பியிருக்கவேண்டிய நிலையேற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது இராதந்திர உறவுகள் காரணமாக நாங்கள் சுலபமாக பெறக்கூடியதாகயிருந்து சினோபார்ம் என லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பைசர் மொடேர்னா தடுப்பூசிகள் அனேகமாக மேற்குலகுடன்  மட்டுப்படுத்தப்பட்டுள்ளன அவற்றை பெறுவதற்கு ஆசியநாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இராதந்திர ரீதியில் தொடர்புகளை பேணுவதால், என்னால் இதனை செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலகிலிருந்து தடுப்பூசிகளை பெறுவது மிகவும் நீண்டகாலம் எடுக்கின்ற நடவடிக்கைஎனவும் தெரிவித்துள்ள அவர் எங்களால் அதுவரை காத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவதற்கு சில்ஆடைவிற்று கொள்ளையடித்த பணம் போதும். வங்கிகளில் மறைத்துவைத்திருக்கும் அந்தப் பணம் வௌிவருமா?

    ReplyDelete

Powered by Blogger.