Header Ads



நாட்டின் எதிரிகளின் நன்மைக்காக செயற்பட்ட விடயத்தை பொறுப்பேற்றுக்கொண்டு அலி சப்ரி பதவி விலக வேண்டும் - சோபித தேரர்


நாட்டின் நன்மைக்காகவன்றி நாட்டின் எதிரிகளின் நம்மைக்காக செயற்பட்ட விடயத்தை பொறுப்பேற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா நீதியமைச்சர் பதவி விலக வேண்டுமென, ஹெல பொது சவிய அமைப்பின் உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட 2019 கொரோனா வைரஸ் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலமானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், நாட்டிற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -08-  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.