Header Ads



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மாவனெல்லையில் ஒருவர் கைது


உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய 32 வயதுடைய நபர் ஒருவர் மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார். 

குறித்த நபர் இணையவழியாக ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.