ரிஷாட்டிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில், ரிஷாட் எம்.பியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன் திரும்ப எடுக்கப்பட்டபோது, பொலிஸார் இந்த விவகாரத்தை பி அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Post a Comment