இலங்கையில் கொரோனாவினால், மரணித்தவர்களில் ஆண்களே அதிகம்
இலங்கையில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 75 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், 24 வீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், 1.2 வீதம் பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 1,714 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 291,291 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment