Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடி எனக் கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்


- Ismathul Rahuman -

உயிர்த்த ஞாயிறு மிலேச்சத் தாக்குதலுக்கு 27 மாதங்கள் நிரைவடைவதை முன்னிட்டு "நீர்கொழும்பு புரவசி எகமுதுவ" ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய சந்தியல் இன்று 21ம் திகதி காலை இடம் பெற்றது. இதில் கத்தோலிக்க பிதாக்கள், கண்ணியஸ்திரிகள், சிவில் அமைப்புகள், பிரஜைகள், பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இங்கு உண்மையை மறைக்கும் போலி விசாரணை வேண்டாம், உண்மையான விசாரணை மூலம் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடி, சம்பூரணமாகாத விசாரணைகளை மீண்டும் முறையாக சம்பூரனபடுத்து, புதிதாக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட காரணங்களை மழுங்கடிக்காதே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் யுக்தியை கேட்டு கருத்துத் தெரிவிப்பவர்களை அடக்காதே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்து அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்து, முரணான கருத்துக்களை முன்வைத்து விசாரணைகள் மழுங்கடிப்பதை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தி நின்றனர்.


No comments

Powered by Blogger.