பெண்களையும், சிறுவர்களையும் விற்கும் இணையத்தளங்களையும், உரிமையாளர்களையும் தேடி வேட்டை
பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களில் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவை குறித்த பணியகம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment