Header Ads



தேசிய முஸ்லிம் பேரவை அங்குரார்ப்பணம் - சோனகர், மலாயர், மேமன், தாவூதி பிரி­வி­ன­ரை உள்ள­டக்கி உரு­வான முத­ல் சிவில் அமைப்­பு


இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன், முத­லா­வது வரு­டாந்தப் பொதுக்­கூட்டம் அண்­மையில் கொழும்பு – 7 இலுள்ள ஜெட்விங் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

முதன் முறை­யாக நாட்டில் வாழும் முஸ்லிம் சமூ­கத்தின் நான்கு பிர­தான பகு­தி­யி­ன­ரான இலங்கைச் சோனகர், இலங்கை மலாயர், இலங்கை மேமன், மற்றும் இலங்கை தாவூதி (போரா) ஆகிய சமூ­கத்­தினர் ஒன்­றி­ணைந்த ஒருங்­க­மைப்­பாக இப்­பே­ரவை இயங்­கு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், இந்த தேசிய முஸ்லிம் பேரவை, அர­சியல் சார்­பற்ற, சமயப் பிரி­வுகள் சார்­பற்ற சிவில் அமைப்­பாக இயங்கும். இது சமூகம் சார்­பான அனைத்து விட­யங்­க­ளிலும் சிறப்­பான சிவில் பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்கும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

‘பேர­வையின் நிர­்மா­ணிப்­பா­ளர்கள்’ என அழைக்­கப்­பட்ட இலங்கை முஸ்­லிம்­க­ளது பல்­வ­கை­மை­யி­னரின் ஊடாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட இந்த பேரவை, இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள மிகச் சிறந்த ஆளு­மை­யுள்ள வளங்­களைக் கொண்டு, இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­காக மட்­டு­மன்றி அனைத்து இலங்­கை­ய­ருக்­கு­மான பொது நன்­மையை நோக்கி அர்ப்­ப­ணிப்­பு­டனும், பொறுப்­பு­டை­மை­யு­டனும் பணி­யாற்ற உறுதி பூண்­டுள்­ளது.

இந்த பேர­வையின் மருத்­து­வ­ரான பேரா­சி­ரியர் கமால்­தீ­னினை தலை­வ­ரா­கவும், அவ­ருடன் இணைந்து சபையில் அப்ஸல் மரைக்கார் (உப தலைவர்), குஸைமா ஜெபர்ஜி (உப தலைவர்), ஸஹரின் ஹமீன் (செய­லாளர்) மற்றும் சப்ரி கௌஸ் (பொரு­ளாளர்) ஆக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, மொஹமட் அட­மலி, அமான் அஷ்ரப், சுரைஷ் ஹாஸிம், சுஹைல் ஜமால்டீன், ஆயிஷா சத்தார் மற்றும் ஏ.ஜி.எம்.யாசீன் ஆகி­யோரை இந்த பேரவை அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த பேரவை தொடர்பில் பேரா­சி­ரியர் கமால்தீன் கூறு­கையில்,

“நாம் அனை­வரும் ஒரு தேச­மாக வர வேண்­டிய நேரம் வந்து விட்­டது. இலங்கை தேசிய முஸ்லிம் பேர­வையின் ஒரு தோற்­றுவாய். ஏனெனில் இதுவே முஸ்­லிம்­க­ளது நான்கு பிரி­வி­ன­ரையும் உள்ள­டக்கி ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ரீதியில் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது சிவில் அமைப்­பாகும்.

நாம் அனை­வரும் ஒரு விட­யத்தால் ஒன்று படு­கிறோம். அது நாம் அனை­வரும் இலங்­கையர் என்­ப­தாகும். அதனை அங்­க­கீ­ரித்­தலே அத­ன­ளவில் பெரும் முக்­கி­யத்­துவம் வாயந்­த­தாகும்” என்றார். – Vidivelli

2 comments:

  1. Total population of Memons in Sri Lanka is 2,000 people.

    2,000/2,000,000×100 = 0.001%

    Total no. of Borahs in SL is 2,500 people.

    2,500/2,000,000×100 = 0.00125%

    Malays appx. 40,000
    40,000/2,000,000= 0.02%

    It has been proposed to allocate 6 seats in the 11 member Assembly (6/11×100 =54.55% )to three communities which represents only 0.02225% of a total population of appx 2 millions SL Muslims. according to the constitution of this organization (Page No.8)

    ReplyDelete
  2. One more Muslim Organisation in the country. The important fact is that it is representative of All, if not almost All, community groups within the Muslim community.

    That members from many groups within the community have got together to serve the Community as a whole is a Remarkable achievement by itself.

    Lets hope and pray that this Group of committed people devote their time and energy for the Betterment of the ENTIRE community which is the Prime Need of the Hour.

    May Allah(Swt) Guide the Officials and Members of the National Muslim Council to carry out its Policies and Plans in the Best Interests of the Community as a whole.

    ReplyDelete

Powered by Blogger.