Header Ads



இரத்தினபுரியில் தொடர் மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கின - வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு உதவுமாறு மஸ்ஜித் நிர்வாகம் கோரிக்கை


எம்.எல்.எஸ்.முஹம்மத்

தொடர்ச்சியாக பெய்துவரும்  மழையைத் தொடர்ந்து  இரத்தினபுரி களுகங்கையின் நீர் மட்டம் மிகவும் உயர் வடைந்துள்ளதால் இரத்தினபுரி நகர் பிரதேசங்கள் உட்பட  களுகங்கையை அண்மித்த பல தாழ்நிலப் பகுதிகள் இன்று (10)அதிகாலை முதல் நீரில் மூழ்கியுள்ளதாக இரத்தினபுரி ஜென்னத் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையின் செயலாளர் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி ஜென்னத் ஜும்மா மஸ்ஜித் வீதி மற்றும் அல் மக்கியா பாடசாலை வீதி மற்றும்  படுகெதர அரபுக் கல்லூரி வீதி உட்பட இரத்தினபுரி நகர் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள  மேற்படி பிரதேச மக்கள் இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ மஸ்ஜிதிற்கும் மற்றும்  பாதுகாப்பான இடங்கங்களுக்கும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள இரத்தினபுரி மக்களுக்கு இயன்ற உதவி ஒத்துழைப்புக்களை வழங்குமாறு  மஸ்ஜித் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.